Monday, October 22, 2018






அவளை எழுதியாயிற்று
அதை படமாக்கி அவளது கதை என்றாயிற்று
நானும் இதோவென்று ஒரு திரைக்கதைக்கு
கிளர்ந்ததுண்டு
நெருங்கும் போதெல்லாம் நகர வேண்டியிருந்தது
அவள் அழகி
வந்ததை வாரி சுருட்டி விழுங்கி
நெருப்பு போல புன்னகைத்தவள்
அவள் திரைக்குப் பின்னே நின்று
சொரிந்திருந்தாள் என்கிற நம்பிக்கையில்
கண்ணீர் தடம் தொடர்ந்து எத்தனைக் காதம் நடக்க முடியும்
மேலும் நமது கற்பனைகள்
சோம்பலான நம்முடைய குடிலின் முற்றத்தில்
நாம் பிளந்து தந்த தென்னோலைகளை
அசைபோடும் யானை.

யாருடைய சரிதமும் நமது கையிடுக்கில் இறங்கும் தண்ணீர் என்று வந்து விடுகிறது செல்லம்,
ஏனென்றால் வாழ்வு.
அது நொடிக்கு தாவும் பட்டாம்பூச்சி
அல்லவா?

No comments:

Post a Comment