Monday, October 22, 2018





நீங்கள் வலி நிவாரணியின் ஆள் தானா
என்று நான் கேட்டுக் கொள்வதில்லை
ஒரு பார்வையில்
ஒரு மனிதக் கணிப்பில்
ஒரு அகங்காரத்தில்
நானும் அப்படி பட்டு விட மாட்டேன்
காலைச்சூரியன், நடைபயிற்சி, பச்சை தேயிலை,
கோபுர தரிசனம் எதுவுமில்லை
இருந்தா இரு போனா போ
ஒரு நாளைக்கு கஞ்சி, ஒரு நாளைக்கு கரிமீனு
எல்லாம் சரிதான்
இஸ்கி புஸ்கி இல்லை அஸ்கு புஸ்கு இல்லை
என்னை எங்கேயாவது விற்று எங்கேயாவது
மீட்டுக் கொள்வேன்
என்றாலும் ஏதேனும் கடைகோடி முட்டு சந்துகளில்
சிக்கும்போது
ஒரு வேளை என்னைப்பற்றி
ஒருவேளை உன்னைப்பற்றி
தப்பிக்க முடியாத போது வலிக்கும்.
பொதுப்படையாய் சந்தேகமில்லாமல்
நான் வலி நிவாரணியின் ஆள். 

No comments:

Post a Comment