Monday, January 14, 2019




அழுகின பழங்களில் கொதித்து
தன்னை எடுத்துக் கொண்டு
துளிகளாக வரிசை நின்று
இறங்கும் சாராயம்
இந்த ராப்பிச்சையின்,
அதன்
பசித்த வீறிடலின்
தொண்டையுள்
முள்.
அலையேகி வலைவீசி
தன்னைத்தான் கைப்பற்றி
மாமிசமாயுண்ணும் தரித்திரம்
வெறிக்கிறது ஜித்துமா
நமது கருக்களில் உருக் கொள்ளப் போகிற
சிசுவையும் கூட
கொஞ்சம் கண்களை அணைத்து வை
என்றோ
கொஞ்சம் லட்டுகளை மறைத்து வை
என்றோ
இசையாத பேர்பாதி சமத்துவத்தில்
எனது கண்ணே
உறக்கம் பூராவிலும்
உனது இதழ்களில் கால் நீட்டிப் படுத்து
முலைகளின் இடுக்குகளில் உள்ள இரவைப்
போர்த்திக் கொள்கிறேன்.

பக்கத்தில் எப்போதும்
எழுந்து போகாத பாம்பு படுத்திருக்கிறது.

No comments:

Post a Comment