Friday, January 18, 2019







கலவியில்
கண்ணுக்குள் கண் என்பது
எதிரொளிப்பில் திடுக்கிட்டு குளிர யத்தனிப்பது
மறு புனித விக்ரகம்
துணியைத் தூக்கிக் கொண்டு
மதிற்சுவர் தாண்டுவதைப்
பார்ப்பது
மணல் தெரியும் பளுங்கு நீரில்
இறங்கிய ஆழம், ஆழத்தின் ஆழத்தில் கூட
நனைந்து விடாத போதாமையை
திகைத்திருப்பது
எச்சில் துப்புவது போல
காமம் முடிந்திராது என்றால்
குத்திக் கொண்டு குருதி இறங்க
உலர்ந்து முடிய வேண்டும்,

நுழைந்து இழைந்து அமிழ்ந்து
ஒழுகியோ உறிஞ்சியோ
மலங்க விழித்த பின்னரே
நாம் தப்பிக்கிற அந்த
ஒற்றையடிப்பாதை,

கசப்பு.

No comments:

Post a Comment