Sunday, September 5, 2021

 


மலைகளின் உச்சிகளில் இருந்து 

ஒரு கருடப் பார்வையில் 

அந்த மாயநதி தட்டுப்பட்டால் 

கடவுளைக் கொல்லும் சீற்றத்துடன்

அவன் விரட்டுவதில்

அந்நதியை   

கீறிப் பாயுமொரு தோணி,

அது 

கிழக்கு முடிந்து மேற்குக்கு திரும்பும் போது

ஆற்றை வருடிக்கொண்டு வரும் 

இளைஞனின் கண்ணாட்டியும் கற்கண்டுப் பிள்ளைகளும் 

கொண்டு சென்று நட வேண்டிய கடவுளை 

கையில் வைத்து விளையாடுவர் 

அஸ்தமன சிவப்பு மூடுகிற நதியை கனலாக்கி 

இந்த சுருட்டை உறிஞ்சும் போது

ஞானத் தங்கம்  

சுகத்தை தாங்க முடியவில்லை. 

  

   

No comments:

Post a Comment