Wednesday, September 29, 2021

 


நுங்கை அடித்து இளநீரில் இறக்கி 

பனித்துண்டுகள் மிதக்கும் போது 

ஒரு அறுபது மில்லி ஓட்கா கலக்கும் 

கைக்கு அடக்கமான குளத்தில் 

நான் எனது முகம் பார்ப்பேன் 


என்னை வெறித்திருந்த காலத்தின் புன்னகையை 

ஏந்தி நின்றவளின் மனம் பார்ப்பேன் 


நாங்கள் பாவிக்காத கத்திகளின் கூர்மை பளிச்சிடும்போது 

அக்குளத்தில் கண்ணீர் அலையடிப்பது 

பார்ப்பேன் 


நார்சிசம் அவமானத்தில் விலகி இருப்பதையும் 

கூட


பார்ப்பேன்.

No comments:

Post a Comment