பார்த்தீர்களா ?
அதோ அந்த புல்வெளியில்
ஊர்ந்து கொண்டு போயிற்று
ஒரு பாம்பைப் போல
என்றான்.
அவன் இசையை கண்ணால் பார்த்தாக
சொல்லுகிறான், மன்னிக்கலாம்.
கடைசி வரை காதில் விழவில்லை என்பதில் துயர்.
அடுத்தது அவன் தன்னுடைய காதலைப் பற்றி
சொல்லுவான் இல்லையா, யார் காதில் விழும்?
No comments:
Post a Comment