Saturday, October 29, 2022

 



கொஞ்சம் குடி 

கொஞ்சம் கூட நிற்காத '

பேச்சு 

தேங்கின மழைநீரை 

ஒலிக்க செய்து சிரித்து நடந்தே 

அக்கடையில் பலூடா சொன்னோம் 

அரட்டைக்கு கவனம் திரும்பாமல் 

காப்பிக் கோப்பையை வெறித்துக் கொண்டு 

ஒருத்தி 

பத்து வருடங்கள் போனபிறகு வந்த ஒரு மழைநாளில் 

நீரஜா என்கிற பெயரில் அவளை நினைத்துக் கொண்டேன் 

அவளுக்கு மகள் பிறந்தாள் 

நான் பார்த்திராத அவள் வளர்ந்து விட்டாள் 

ஒரு பருவப்பெண் அழகாக இருந்தால் 

அவள் வாய் விட்டு சிரிப்பதாக இருந்தால் 

அவள் நீரஜாவின் மகள் தான்,

எனக்கு சொல்லுங்கள்.     

No comments:

Post a Comment