நான்கு
பரணில் இருந்தோ
பாதாளத்தில் இருந்தோ
ஒரு சரளைக்கல்லை
அதை விற்று
சாப்பிட்டதில்லை
ஏதேதோ வாழ்வுகளின் திருப்பங்களில்
நானறியாமல் புகை போல இருந்து மறைந்ததற்கு
கோப்புகள் பாராமரிக்கிற மரபில்லை
என்றாள்
அவளை எனக்கு தெரியும்
அவள் நான் உருவாக்கிய ஒரு கதாபாத்திரம் தான்
தனிமை பற்றின பேச்சில்
அத்தி மரத்தின் உச்சியில்
தேன் மினுங்கும் ஒரு கனியைக் காட்டியபோது
ஸ்கூல் பையன் எட்டி உதைத்த காலி குளிர்பான டப்பாவை
பார்த்திருந்தாள் அவள்.
No comments:
Post a Comment