Monday, November 6, 2023

 


நான்கு
பரணில் இருந்தோ
பாதாளத்தில் இருந்தோ
ஒரு சரளைக்கல்லை
நான் எடுத்துக் கொடுத்து அவர்கள்
அதை விற்று
சாப்பிட்டதில்லை
ஏதேதோ வாழ்வுகளின் திருப்பங்களில்
நானறியாமல் புகை போல இருந்து மறைந்ததற்கு
கோப்புகள் பாராமரிக்கிற மரபில்லை
என்றாள்
அவளை எனக்கு தெரியும்
அவள் நான் உருவாக்கிய ஒரு கதாபாத்திரம் தான்
தனிமை பற்றின பேச்சில்
அத்தி மரத்தின் உச்சியில்
தேன் மினுங்கும் ஒரு கனியைக் காட்டியபோது
ஸ்கூல் பையன் எட்டி உதைத்த காலி குளிர்பான டப்பாவை
பார்த்திருந்தாள் அவள்.
All reactions:
Kaveri Ganesh, Cecilia Joseph and 8 others

No comments:

Post a Comment