மூன்று
அவளை எனக்கு தெரியும்
உலகின் நியாயங்கள்
கணக்கற்றுத் திரளும் போது
கவனிக்க ஆகாத விஷம்
நாம் வெளிச்சம் பாய்ச்சாத
இடுக்குகளில் தங்குகிறது
சாமனின் மேல் அம்பு எய்யப்பட்டதற்கு
முட்டுக்கட்டப்பட்ட லாஜிக்கில்
இருந்து வந்தவர்கள்
எப்போதும் எனக்கு ஆறுதல் கூறுகிறார்கள்
நானிருப்பது உள்ளேயா, வெளியேவா
பார்த்து சொல்லு என்கிறாள்.
அவள் நான் உருவாக்கிய ஒரு
கதாபாத்திரம் தான்
No comments:
Post a Comment