Saturday, May 11, 2013





இரவின் தாழி
உருண்டு
கனவின் கடைசி சுவரில்
முட்டித் திறந்த போது
புன்னகையை மூடிக் கொண்டு
நின்ற நீ
கட்டி போடப் பட்டிருந்த
வலியை
அவிழ்த்து விடுகிறாய்
அது என்னை ஆயுள் முழுக்க
நக்கி கொண்டு நடக்க.

No comments:

Post a Comment