Wednesday, August 17, 2016





ஜரதுஷ்டிரன் அல்லது
நாரணத்து பிராந்தன்

ஏன் மலையேறினார்கள் என்றால்
ஏறினார்கள் அவ்வளவுதான்
ஏன் கல்லையுருட்டினார்களென்றால்
உருட்டினார்கள் அவ்வளவுதான்

கிருஷ்ணன் எதற்கு மண்ணை தின்றான்
கிறிஸ்து ஏன் சிலுவைக்கு போனான்
அற்ப சாரு செய்த தாசி ஒருத்தி
எழுத்தின் மேல் ஏன் மூத்திரம் பெய்தாள் ?

உனக்கு வாய்க்காத சந்தின் சந்தில்
நீ திருடாமல் இருந்தது
சரி.

நீ ஏன் திருடினாயென்று லாஜிக் துழாவாதே.

ஷட் அப்
மேன்.  

No comments:

Post a Comment