Friday, September 22, 2017




சன்னலுக்கு வெளியே அங்கே
ஒரு பறவை கிரீச்சிட்டு தேய்ந்து
மறைந்தவாறு இருக்கும் போது
இன்று அருவிக்கு செல்வதில்லை, விவாகரத்து
ஹியரிங் பற்றி கேட்க வேண்டும், ஷேவிங் லோஷன்
இல்லை, மீரா போனில் என்னவோ கிசுகிசுத்தாளே, இந்த விஸ்கியும்
மறதியும் என்ன சொல்ல, அடுத்த முறை
வனாந்திரத்துக்கு இப்படி தனியே வரக்கூடாது,
ஜூட் இருந்தால் சண்டை இழுத்து பொழுது போகும், ஆம்,
அடுத்த முறை நீ ரொம்ப நேரம் செய்ய வேண்டும்
என்று சொன்னாள், புது ஷூ ஓன்று வாங்கிக் கொள்வோமா,
மின்சாரம் தடைபடாவிட்டால் மின்மினிகள்
மினுங்கி பறக்கா விட்டால் அவள் இதழ்களிலேயே
இருக்க முடியுமே அரை மணி நேரம், மகளே
லாலிம்மா என்ன செய்து கொண்டிருக்கிறாய்

ஷட் அப் .

பள்ளத்தாக்கின் அமைதியெங்கிலும் விம்முகிறது
நூறாயிரம் பறவைகளின் ஹோ.

No comments:

Post a Comment