Sunday, November 18, 2018





கரி நிறம்
மூங்கில் புதரில் அசைகிறது
இந்த சாயந்திரத்தின் நிறம்
அது என்னைக் குறி வைக்கிறதா
அதை அறிய முடியாது
வீறிட்டு அழைக்க வேண்டுமோ
யாரையும்
அதுவும் ஐயமே
நின்ற இடத்தில் இருந்து ஊர்கிறேன்
கீழே வீழாதிருக்க இருதயத்தைப்
பிடித்துக் கொண்டு
ஒரு தும்பிக்கை எனது முதுகில்
நிரந்தரம் வரும் தொட்டு விடாமல்

சோறு ரொம்ப முக்கியம்
மானம் ரொம்ப முக்கியம்
அதில் ஆனை ஒளிய ஆகாது
இல்லையா?

No comments:

Post a Comment