Wednesday, October 5, 2011

கனவும் காயங்களும்






வருத்தம் கொள்ளுவதற்கு
எதிலேயும் எதுவும் இருப்பது இல்லை
என்றாலும் எப்படியோ
எல்லாவற்றிலும் வருத்தம்
உண்டாகி விடுகிறது

நிலவு
அலைகடலில் முகம் பார்ப்பது போல்
நாமெல்லாம்
யாரிடமோ எதிர்பார்க்கும் போது
வெறுமை பள்லிளிக்கிறது
யாரிடமும் குற்றமில்லை
வாழ்வின் சமுத்ரம் ஒருபோதும் மற்றவருக்காக
பொங்குவதில்லை

மற்றும்
புரிந்த கொள்வது என்பதும் பேதமையே
ஆணியறைவது போல்
புரிய வைக்க திராணியற்றவரின்
வலி அது

ஆக
வலியும்
வருத்தமும் எல்லாம்
வார்த்தைகள் தான்
ரணமுற்றவன்
ஊதிக் கொள்வதே
வாழ்கை


No comments:

Post a Comment