கடவுள்
வந்திருந்தான்
கனவில் தான் என்றாலும்
அவன் கடவுள் தான் என்பதில்
சந்தேகமில்லை
துயரங்களால் பழுத்த
எனது கண்கள் அவனது கண்களுக்குள்ளே
நுழையும் போது
அவன் வேறு திசை பார்த்தான்
பறந்திருந்த தும்பியின் வாலில்
கல்லைக் கட்டி
துள்ளி குதிக்கிற ஒரு வாண்டுப் பையன்
கண்டிப்புப் மிகுந்த ஆசிரியரிடம் பிடிபட்டது போல்
விழிக்கிறது
அவனுடைய காருண்யம்
கற்பூரக் கரியை தாண்ட முடியாமல்
அடைப்பட்டு விட்ட புன்னகை
திணறுகிறது
பாவம்
சரி, போய் வா
என்றேன்.
வந்திருந்தான்
கனவில் தான் என்றாலும்
அவன் கடவுள் தான் என்பதில்
சந்தேகமில்லை
துயரங்களால் பழுத்த
எனது கண்கள் அவனது கண்களுக்குள்ளே
நுழையும் போது
அவன் வேறு திசை பார்த்தான்
பறந்திருந்த தும்பியின் வாலில்
கல்லைக் கட்டி
துள்ளி குதிக்கிற ஒரு வாண்டுப் பையன்
கண்டிப்புப் மிகுந்த ஆசிரியரிடம் பிடிபட்டது போல்
விழிக்கிறது
அவனுடைய காருண்யம்
கற்பூரக் கரியை தாண்ட முடியாமல்
அடைப்பட்டு விட்ட புன்னகை
திணறுகிறது
பாவம்
சரி, போய் வா
என்றேன்.
No comments:
Post a Comment