Wednesday, October 5, 2011

அழையா விருந்தாளி







 

கடவுள்
வந்திருந்தான்

கனவில் தான் என்றாலும்
அவன் கடவுள் தான் என்பதில்
சந்தேகமில்லை

துயரங்களால் பழுத்த
எனது கண்கள் அவனது கண்களுக்குள்ளே
நுழையும் போது
அவன் வேறு திசை பார்த்தான்
பறந்திருந்த தும்பியின் வாலில்
கல்லைக்  கட்டி
துள்ளி குதிக்கிற ஒரு வாண்டுப் பையன்
கண்டிப்புப் மிகுந்த ஆசிரியரிடம் பிடிபட்டது போல்

விழிக்கிறது
அவனுடைய காருண்யம்
கற்பூரக் கரியை தாண்ட முடியாமல்
அடைப்பட்டு விட்ட புன்னகை
திணறுகிறது
பாவம்

சரி, போய் வா
என்றேன்.







No comments:

Post a Comment