நீ உதிர்த்த ஒற்றை சொல்லின் முலை குடித்து தூங்காதிருந்து தூங்கி போன அந்த
தினங்களுக்கு திரும்ப விரும்புகிறேன். மயில் பீலி கற்பனை முடிந்திராத அந்த
பளிங்கு தினங்களுக்கு.கசடு கலவா கண்ணீர் ஸ்படிகம் தித்தித்த
தினங்களுக்கு.வாழ்வின் வீதியில் புருஷனோடும் குழந்தைகளோடும் சலிப்பு வாங்கி
திரும்பும் உன்னை சந்திப்பதற்கு முன்னே.
No comments:
Post a Comment