Tuesday, May 29, 2012




ஏகாந்தம்.

இரு விழிகளென விரிந்த
இவ்வுலகின் எதுவொன்றும்
இதுவென்று தெரியாத
ஏகாந்தம்.

குளிர்முலை கிடைக்காத சிசு
பசி கொண்டழுத பின்னர்
இருள்படியிறங்கியதில்
இதமாக உறங்கும்
ஏகாந்தம்.

நிழலென ஒரு விரல்முனை
நீறுதற்கொரு நீர்த்துளி
வாயுவை புரவி பண்ணி சாடாமல்
காத்திருந்து காத்திருந்து
கரைந்த பின்
ஏகாந்தம்.

பூக்குமொரு மலரின்
புள்ளியை பற்றியேறி
காய்க்கிற புதிரை காதில் பேசும்
நீ என்ன
என் ஏகாந்தத்தின்
எதிரியாகிறாய்,
என் கண்ணே, கண்ணம்மா
நீயேன் எனது கண்ணீராகிறாய்?

No comments:

Post a Comment