Wednesday, May 23, 2012



' தெய்வத்திண்டே விகிர்திகள் ' என்று ஒரு மலையாள படம். லெனின் ராஜேந்திரன் இயக்கியது. ரகுவரன் என்கிற கலைஞன் நடிக்க பின்னணியில்  மதுசூதனன் நாயரின் கவிதை. அதன் அர்த்தத்தை மற்றவருக்கு சொல்ல முடியுமா என்ற ஆற்றாமையில் மொழியாக்கம் செய்திருக்கிறேன்.  மற்றபடி இதில் பாண்டியத்துவமும் இல்லை. செய்த காரியத்தை நிறைவாய் செய்ய முடியவும் இல்லை. மலையாளம் தெரிந்தவர்கள் மன்னிக்கவும்.



இருளின் மஹா நித்திரையில்
இருந்து எழுப்பி நீ
நிறமுள்ள ஜீவித பீலி தந்தாய்
எனது சிறகிற்கோர் ஆகாயம்
நீ தந்தாய்
நின் ஆத்ம சிகரத்தில் ஒரு
கூடு தந்தாய்

ஒரு குட்டி பூவிலும்
கடல் காற்றிலும்
நீ நீயாய் மணப்பது
எங்கு வேறு
உயிர் உருகுகையில்
ஒரு துளி தவறாமல்
நீயாகவே நகரும் நதி
எங்கு வேறு
கனவின் இதழாய்
உன்னை பரப்பி
நீ விரிய வைத்த ஒரு ஆகாயம்
எங்கு வேறு

ஒரு குட்டி ராப்பறவை
அழுகிற போதும்
முன்பிருந்த அருவியொன்றின்
தாலாட்டு தளரும் போதும்
கனிவினால் ஒரு கல்
கனி மதுரம் ஆகும் போதும்
உன் இதயத்தில் நான் எனது இதயத்தை
பொருத்தி இருக்கிறேன்
உன்னில் அபயம் தேடி போகிறேன்

முடியாது விலக

முடியாது விலக
உன் இதயத்தில் இருந்து என்னை
எந்த சொர்க்கம் அழைத்தாலும்
உருகி நின் ஆத்மாவின் ஆழங்களில்
வீழ்ந்து ஒளிரும் போது தான் சொர்க்கம்
உன்னில் கரைந்து அழிவது என்
நித்ய சத்தியம்






No comments:

Post a Comment