Tuesday, May 29, 2012

யார்..?





எங்கோ எங்கோ எங்கேயோ
தூரத்தில் தூரத்தில் வெகு தூரத்தில்
அழைத்துக் கொண்டிருக்கிறது
அந்த குரல்

நேற்று கழிவறையில் இருந்த போது
கேட்டேன்
வருஷங்களுக்கு முன்னொரு நாள்
கருவறையில் மிதக்கும்போது
கேட்டேன்
உள்ளாடைகளை கூட  சரியாய் அவிழ்க்காமல்
ஒரு வேசியின் யோனியில்
அசைகையிலும்
தான் கேட்டேன்

பசிக்கும் குடல் வெறியின் வழியே
பரிதவித்து பார்த்த பருவத்தின் வழியே
தூங்காமல் செய்த காதலின் வழியே
துக்கித்து அடைந்த பொருட்களின் வழியே
தேடி தேடி வெளியேறினேன்
தேடாத குகைகளில்
கேட்கிறது குரல்

எங்கோ எங்கோ எங்கேயோ
தூரத்தில் தூரத்தில் வெகு தூரத்தில்
அழைத்துக் கொண்டிருக்கிறது
அந்த குரல்





  

No comments:

Post a Comment