Tuesday, July 5, 2011

விபத்து

 
ஹமீத் வந்திருந்தான்
நன்றாய் இருக்கிறேன்  என்றான்
எத்தனை வருடங்கள் ஆயிற்று
என் பிள்ளைகளிடம் உன்னைப்பற்றி
பேசுவதுண்டு என்றான்

உன்னோடு படித்த  ரசியா
மகள்களை விட்டுவிட்டு
மருந்து குடித்து செத்துப்போனாள்
தம்பி நாயக்கர் பெண்ணோடு போய்
தனியாய்  இருக்கிறான்
ஹயுப்  இப்போ கோடிஸ்வரன்
அம்மாவிடம் உன்னைப்பற்றி சொன்னால் 
சந்தோஷப்படுவார்கள்

அய்யப்பன் மலைக்கு போவதுண்டா
கல்யாணம் செய்யல்லையே கடைசி காலத்தில்
என்ன செய்வாய்
அடேய் காக்காப்பூக்களை அடித்து
எவனோ ஒருவனின் மண்டை கிழிந்ததே
ஞாபகம் இருக்கா
நரைச்சுப் போச்சுடா எனக்கும்
இனி என்ன இருக்கு
வாழ்க்கைல என்னத்தடா கண்டோம்
இப்பவும் நீ அப்படியே தாண்டா இருக்கே

ஆம் ஹமீது
ஆனால் அப்படி இருந்துவிட்டது
விபத்து
வா வந்து கோவிலை கட்டென்று
ஏனோ என்னை கூப்பிடவில்லை
ராமன்      

No comments:

Post a Comment