இன்று கொஞ்சம் லஹரி அதிகம்
உன்னை பற்றி பேசுவதாய்
நினைத்து
என்னை பற்றி பேசியிருந்தேன்
பேசும் தருணத்தில் எல்லாம்
பேச முடியாத இடத்தில் இருக்கிறாய் நீ
கூழாங்கல்லில் நகரும் நதிக்கு
உலகம் சிரிக்க
நனைந்த நெஞ்சுடன்
வரளும் அந்நியன்
யாரும் அறியா என் பாலையில்
வானவில்லாய் நீ புன்னகைக்கையில்
எப்படி சொல்வேன்?
எத்தனை தனிமை
கவிதையில் சிக்காமல்
கண்ணீரில் புலப்படாமல்
நீ ஒளிந்த யுகம் நானறியேன் எனினும்
அதோ அந்த சிறுவனுக்கு
நிலா காட்டி கதையளக்கிறாள்
அதே நீல பாவாடையில்
இன்றைய சிறுமி.
No comments:
Post a Comment