Thursday, July 7, 2011

ருது





தனிமையென்பது ஒரு வெற்றுசொல்
அதற்குள் தீ மூண்டெரிவதில்லை

நிழல் நோக்கி களிப்புறும்
துக்கத்தின் பறவைகள்
அங்கு சிறகடிக்குமா
உலர்ந்த ஊற்று அடைபட்டிருக்க
கண்ணீருக்கும் அனுமதியில்லை

தனிமையென்பது
குழந்தை மீது ஏறும் நாகம்
நூறு சந்தியா ஒன்றாய் முறுகும்
மந்திர வான்
மிதந்தலைந்து மலை சுமக்கும்
பிதுங்கல்
சொந்த ரத்தத்தில் வந்த சகோதரம்
ஒரு தேனியின் ரீங்கரிப்பும் கேட்காத
கானகம்

பூக்கள் இதழ் விரிக்க
அந்த மலை முகட்டில் சூரியன் வரக்காத்திரு
ஒரு வேளை வந்து சேருவது
                                           கடவுளாயிருக்கலாம்                                                

No comments:

Post a Comment