Going Study
இப்போதும் உன் கண்களை பற்றிதான்
யோசித்து கொண்டிருக்கிறேன்
என்றோ ஒரு பால்ய நாளில்
நிலா கால இரவில் வன்தேவதையாய்
நெஞ்சிடித்து புகுந்தது
அந்த கண்களால் தான்
எண்ண தொலையா புதிர்களின் பெருங்கடலில்
வீசி எறியப்பட்ட கண்ணாடி தொட்டி மீன்
களவாடும் போதும்
கடவுளாகும் போதும்
வெட்ட வெளி நீள் வானாய் என்னை
வட்டமிட்டு கண்காணிக்கும்
இரு வேட்டை நாய்கள்
கருவறையின் இதத்தில்
கண்ணீரின் ருசியை புகட்டி
பலி பீடம் விரித்து பச்சை இரத்தம் கேட்கிற
சாமியாடிகள்
வெறுக்கிறேன்
வெறியோடு விரும்பி தளர்கிறேன்
கொல்ல விரும்பி முத்தமிடுவதில்
நான் நானாகி நிலைத்ததற்க்கு
நன்றி.
1 comment:
Miha nanraga irukkirathu. Vaazhthukkal.
Anbudan - Francis / Narayanan
Post a Comment