முலை பற்றி முண்டும் போதே
பாலன்றி என்னவோ வேண்டியிருக்கிறது
குழந்தைக்கு
எத்தனை துயர் இது.
சட்டையை மாற்றிப் பார்த்து
சட்டங்களை மீறி பார்த்து
காதலில் ஊறி பார்த்து
கடவுளை தேடி பார்த்து
நாம் பார்க்க விரும்புவது
நம்மைத் தானோ
ஒருவேளை
வாழ்வின் தெரு முடிந்து
இறுதியின் இறுதியில்
நான் சந்திக்க முடியுமா
என்னை
நானறியாத திருப்பத்தில்
எனக்காகக் காத்திருக்கும்
எனக்கென்ன அடையாளம்,
எப்படி அறிவேன்
என்னை ?
No comments:
Post a Comment