Saturday, August 20, 2011

என் பொண்டாட்டியோட பேரு ஆதிலட்சுமி. என் பிரண்டு கதிரோட பொண்டாட்டி பேரு சந்தானலட்சுமி. ரெண்டு லெட்சுமிங்களும் அவன் வீட்டு கிச்சன்ல நின்னு கிசுகிசுத்து, கடசியா  இந்த ஞாயித்துக் கெழம அவுட்டிங் போறதா முடிவு எடுக்கப்பட்டது. பசங்களுக்கு செம்ம ஜாலி. ஒரு கார வாடகைக்கு எடுத்துகிட்டோம்.

வேறங்கே போறது. ஜனங்களுக்கு சாப்பாடு போடாம வேலைவெட்டி இல்லாத ராஜாங்க செதுக்கி வச்ச மஹாபலிபுரத்துல கொஞ்ச நேரம் முழிச்சிகிட்டு நின்னுகிட்டிருந்துட்டு கால நனைக்க பீச்சுக்கு போனோம். அங்க ஒண்ணு ரெண்டு மீன்கார பசங்க சூத்து கழுவறதயும், வெள்ளக்கார ஜோடிங்க மவுத் கிஸ் அடிக்கறதயும் பாக்க வேண்டி வந்ததுல ரெண்டு லட்சுமிங்களுக்கும் மகா கோபம். பசங்க நல்லபடி வளர வேணாமான்னு அவங்க நியாயம் கேட்டப்போ சரி, தீம் பார்க்குக்கு போவலாம்னு முடிவாச்சு.

வெய்யில்ல ஒர்த்தர் கோட்டு சூட்டு போட்டுகிட்டு கறுப்பா வேர்த்து வழிஞ்சிகிட்டு எல்லாருக்கும் வெல்கம் சொல்லிக்கிட்டிருந்தார். ரொம்ப பாவம்ன்னா என் பொண்டாட்டி. அவர சுத்தி கேமராங்க ரவுண்ட் அடிச்சிக்கிட்டிருந்திச்சி. அவர் தான் இந்த தீம் பார்க்குக்கே ஒணர்ன்னு சொன்னா இவ கொழம்பிப் போயிடுவான்னு நான் ஒண்ணும் சொல்லிக்கலை. அது மட்டும் இல்ல, பொம்பளைக்கு எதுக்கு ஜெனரல் நாளேஜ்? கொழந்தைங்க கூட சேந்துகிட்டு இதுங்களும் குரங்காவ ஆரம்பிச்சி அதுக்கு மேலேயும் இதுக்கு மேலேயும் தாவி சறுக்க ஆரம்பிச்ச பெறகு நானும் கதிரும் தனியா ஆனோம்.

சரக்கு ஏதாவது கெடைக்குமான்னான்.

எப்டிடா, இது குடும்பங்க குதூகலப்படறதுக்காக கட்டப்பட்ட இடம்ன்னேன்.

'
டயர்டா இருக்கு!'

"
ராத்திரி ஓவர்டைம் பாத்தியா ?"

"
ஆமா. டிவி ல பழய படம் ஒண்ணு.  பார்பரா இலியான்னு ஒர்த்தி. டெம்ட்டாயிட்டேன். இப்ப முதுகு வலி !'

லக்ஷ்மி
ஒத்துழைப்பாங்களா ?"

"பஞ்சு முட்டாய தின்ன தெரியாம முழிச்சாளே, அதுக்காக பாவம்னு நெனைச்சியா. பிசாசுடா. நம்ம பழய சரஸ்வதிய ஞாபகம் இருக்கா, அவளே தேவல !"

* * *


சரஸ்வதி மிகவும் மென்மையான முறையில் எனக்கு உத்தரவிடுவதுண்டு. அதன்படியே இறுதிக் கட்டத்தில் முழுமையாய் அவள் மீது படுத்து எலும்புகள் நொறுங்கிப் போகிற வண்ணம் நசுக்க வேண்டும். உடலசைவை நிறுத்தி விடக் கூடாது. ஒரு மிருகம் போல அவளுடைய கன்னத்தையும் மூக்கையும் கடித்து உறுமவும் வேண்டும். அப்படியெல்லாம் செய்து கனத்தை இழந்தவனாக தளர்ந்து மல்லாந்த போது 'நீ எனது தெய்வம் !" என்றாள்.

"சரி "

"தூக்கம் வருதா ?"

" ம் "

"ரெண்டு தடவ ஆச்சில்ல, அதான் !"

" அதான் ! அதான் !" எனக்கு கண்கள் செருகிக் கொண்டு போகும் போது அவள் பகுதி திறந்த திரைச்சீலையை அவசரமாய் மூடி கடவுள்களிடம் இருந்து தப்பிப்பது தெரிந்தது. புத்தி போட்டுக் கொண்டாள். தண்ணீர் குடித்து விட்டு என்பக்கம் நீட்டினாள். "குடிச்சிட்டு போ. போய் கதிர அனுப்பு !'

நான் தயங்க அவள் எங்கேயிருந்தோ தேடி இரண்டு பெரிய கரன்சிகளை தந்தாள். 

" வச்சுக்க !"

நான் சென்று புதரில் பதுங்கி நிற்கிற வேங்கை போல காத்திருந்த கதிரை அனுப்பினேன். பிறகு சுகமான தூக்கம். கதிர் எப்படியும் விடிகிற நேரத்தில் தான் வர முடியும்.

இப்படி கழிகிற தினங்களில் சில நேரம் நாங்கள் அண்ணாச்சியை வீட்டின் கேட்டிலோ, ரோட்டிலோ சந்திப்பதுண்டு.

"சாப்ட்டாச்சா பிரதர் ?"

"சாப்ட்டாச்சு அண்ணாச்சி !"

அண்ணாச்சி சரஸ்வதியின் வீட்டுக்கு ரெண்டு நாட்களுக்கு ஒரு தடவை வருவார். அந்தி சாயும் நேரம் தான் அவருக்கு பிடிக்கும். ஒரு அரை பாட்டில் பிராந்தியில் பாதியை அவர் குடித்து விட்டு சரஸ்வதிக்கு சிக்ஸ்ட்டி எம்.எல். அப்புறம் இரண்டு  பேரும் பிரியாணி சாப்பிடுவார்கள். அதற்கு பின் அவர் வீடியோ போடுவார். சரஸ்வதி அதை பார்க்க வேண்டும். அவளுடைய முகத்தில் உணர்ச்சிகள் ஏறுகிறதா என்று கூர்மையாய் பார்த்துக் கொண்டிருந்து விட்டு ஏறிய பின் டெக்கை அணைப்பார். இப்போது நம் சரஸ்வதி அரை நிர்வாணத்துடன் ஏதேனும் ஒரு சினிமா பாட்டு பாடியவாறு டான்ஸ் ஆடிக்காட்ட வேண்டும். அவருக்கு மூடு இருந்தால் சிலநேரம் கைதட்டி உற்சாகப்படுத்துவதும் உண்டு. பிறகு  க்ளைமாக்ஸ் நெருங்குகிறது. உண்மையிலேயே இந்த அலுவல் சரஸ்வதிக்கு மிகவும் சவாலாய் இருக்கிற ஒன்றாகும். என்ன சோர்வு ஏற்பட்டாலும் அவள் உயிர்க்கிற இடமும் இதுதான். ஆகவே பதுங்கி பதுங்கி இருளில் நான் நுழையும் போது அவள் தயாராய் இருப்பாள். நான் வெளியேறிய பிறகு கதிருக்காகவும் தயாராய் இருப்பாள். "அவ என்ன தெய்வமா  நெனைச்சுகிட்டிருக்காடா !" என்று கதிர் கூறும் போது நான் மறுப்பதில்லை.

எங்கள் இருவருக்கும் எப்போதேனும் சற்று குற்ற உணர்ச்சி வருவதுண்டு. அப்பாவும் அம்மாவும் இருக்கிற வீட்டின் கதவு பூட்டப்பட்டிருக்க வெளியே ரோட்டில் அலையும் அந்த சிறுவனுக்கு ஐஸ்க்ரீமோ, கேக்கோ வற்புறுத்தி வாங்கித் தருவோம். மிகவும் களையான பயல். பள்ளியில் முதல் ரேங்க் வாங்கி புத்திசாலி என்று பேரெடுத்தவனாம். தேங்க்ஸ் அங்கிள் என்ற அவனது மழலைக்குரல் மிகவும் இனிமையானது. சரஸ்வதியின் பிளந்த கால்களுக்கு நடுவே இயங்கும் போது தூங்காமல் என்னைப் பார்க்கிற இவனது இரண்டு கண்களை எனக்கு தெரியும். நான் சற்று தயங்கினால் சரஸ்வதி அவனது தோளில் தட்டி திரும்பிப் படு என்று அதட்டுவாள். பையன் மிகவும் நல்லமாதிரி. உடனே அம்மா சொல்வதை கேட்டுக் கொள்வான். " இன்னொரு கேக் சாப்டறியா ராஜா ?"

"வேணா அங்கிள், வயிறு புள்ளாயிருச்சி !"

* * *

தன் குடும்பத்தாருக்கும், என் பிள்ளைகளுக்கும், லக்ஷ்மிக்கும் கதிர் பாப்கார்ன் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் எதையோ கூற என் மனைவி வாய் விட்டு சிரிப்பது தெரிகிறது.

நான் இங்கேயிருந்து எழ முயல்வதற்குள் "அங்கயே இரு. வரேன் " என்றபடி எனக்கு அருகே கதிர் வந்து விட்டான்.

"என்ன யோசனை ?" என்றான்.

" காருக்கு எவ்வளவு ஆகும் ?" என்றேன். 

எனக்கே தெரியாமல்.

"அதுக்கா கவலப்படற ? விடு. நான் குடுத்துடறேன் !"

உண்மையிலேயே கதிர் எனது உயிருக்கு உயிரான நண்பன். சின்ன வயதிலிருந்தே நாங்கள் இருவரும் தோழர்கள். ஷோலே படத்தில் தர்மேந்திராவும், அமிதாப் பக்சனும் ஏ, தோஸ்துஹி என்று லொக்கடா வண்டியில் பாடிக் கொண்டு போவார்களில்லையா. அதைப் போல நாங்களும் பாடி பார்த்திருக்கிறோம். அதெல்லாம் எதற்கு, நீங்கள் இருவரும் சகோதர்களா என்று கூட சில ஜனங்கள் கேட்டிருக்கின்றன. இன்னொரு நண்பன் நீங்கள் இருவரும் ஹோமோ செக்சுவல்சா என்று கூட கேட்டிருகின்றான். அதெல்லாம் கிடையாது. ஒரே நேரத்தில் நீங்கள் இருவரும் இருங்களேன் என்று சரஸ்வதி வற்புறுத்தி கேட்ட போது கூட இருவருமே அதை மறுத்திருக்கிறோம்.

* * *


ஆனால் இதற்கு முன்பிருந்து சென்று விட்ட நான்கு பேச்சுலர்ஸ் பையன்களோடு ஒரே நேரத்தில் இருந்திருக்கிறேன் என்றாள் சரஸ்வதி ஒரு நாள்.

எனக்கு வயிறெரிந்தது.

மிகுந்த தயக்கத்துடன் இதுவரை நடந்தது எல்லாம் சரி, இனிமேல் ஒழுக்கமாய் வாழ முயற்சி செய்யலாமே என்கிற ரீதியில் எதை எதையோ உளறி அன்றிரவு அவளை தவிக்க வைத்தேன்.

நான் கெட்டவளா, கெட்டவளா என்று நூறு தடவை அவள் கேட்ட கேள்விக்கு எனக்கு என்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை. மாற்றி பேசி சமாதானப்படுத்தி விடவும் முடியாது என்பதால் காம வசப்பட்டவன் போல நடித்து அவளைத் தூண்டி விட ஆரம்பித்தது வெற்றி பெற்றது. அவள் என் கேள்விகளையும், தன்னையும் மறந்தாள். எனக்கு புரிந்தது கொஞ்சங் கொஞ்சமாய். அவளுடைய இந்த உல்லாசங்கள் அனைத்துக்கும் காரணம் நடந்து கொண்டிருக்கிற பலவற்றையும் மறக்க வேண்டும் என்பதற்காகத் தான். அவளே வாரி விழுங்கித் தின்னுகிறாள். அது செரிப்பதற்காக அவளே சிரசாசனம் செய்கிறாள்.

பதினாறு வயசாம் அப்போது. அங்கிருந்தே அவளது இடறல்கள் தொடங்கி விட்டன.

மைசூர் பக்கம் எங்கேயோ ஒரு கிராமத்தில் பகுதியில் நின்று போன படிப்புடன் சாணி மிதிக்கும் போது அவளுக்குள் இனந்தெரியாத துடிப்புகளிருந்தன. வாய் விட்டு கத்தி பாடுவதற்கு விரும்பினாள்.  நடனமாட விரும்பினாள். எங்கோ காடு மேடு ரோடுகளை தாண்டி புகைவண்டிகளும் விமானங்களும் போய் சேரும் சொர்க்க வெளியில் அவள் விரும்பக் கூடிய மனிதர்கள் இருந்து அவளை புரிந்து கொள்வார்கள் என்று நித்தம் தத்தளித்தாள். இளமையும் துடிதுடிப்புமான இயற்கை அவளுக்குள் நின்று ஊழியாடிய போது அதை பயன்படுத்திக் கொண்டவர்கள் வேறு ஆட்களாயிருந்தனர். வறுமை சௌகரியம் செய்து கொடுத்ததில் தான் விலை கொடுத்து வாங்கப் பட்டோமா திருமணம் செய்து கொடுக்கப் பட்டோமா என்பது அவளுக்கே அறியாத புதிர். அண்ணாச்சியை பொறுத்தவரை அவருக்கு இன்னும் ஒரு வீடு. இவளுக்கோ சோறு. அண்ணாச்சி பத்தினிகளை மட்டுமே விரும்புகிற ஆளாயிருந்த போதும் இவளது சன்னல்களில் வேடிக்கைகள் தெரிந்தன. சோற்றை தின்றவாறு அவள் சுவாரஸ்யங்களுக்கு அலைந்தாள். என்னைப் போன்ற எத்தனையோ ஆண்களின் சாதுர்யங்களை அவள் நம்புகிறாள். அதே நேரம் அடிமைத் தனத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வேறொரு இடத்தில் அரசியாகவும் அவளால் முடியும்.

ஒரு நாள் குடிபோதையில் கதிர் அழுதான். 

என்னவென்றேன்.

அடுத்த வீட்டில் விருந்தாளியாய் வந்திருக்கிற ஒரு சினிமாக்காரனுக்கு வலை வீசிக் கொண்டு இருக்கிறாள். எனக்குள் பெருத்த ஆசுவாசம் ஏற்பட்டது. நான் நல்ல பிள்ளையாவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த காலம் அது. 'விடுடா ' என்றேன். கள்ளப்புருஷன்களுக்கெல்லாம் எதற்கு டென்ஷன் என்பது என் தரப்பு. அவன் நோட்டு புத்தகங்களில் சரஸ்வதி சரஸ்வதி என்று எழுதி விட்டு அன்று ராத்திரி பளார் பளாரென அறைந்திருக்கிறான். மறுநாள் அவள் அடி வாங்கின சுகத்தைப் பற்றி விவரித்து சொல்லி உனக்காக நான் சாகவும் தயார் என்று கண்ணீர் விட்டிருக்கிறாள். கதிர் அவளை கல்யாணம் செய்து கொண்டு விடுவானோ என்கிற பயம் என்னை பற்றியது.

ஒரு நாள் பொழுது விடிந்த போது அவளை காணவில்லை.

கதிர் ஆவேசமாய் சென்று பார்த்த போது வழக்கப்படி அந்த சினிமாக்காரன் உட்கார்ந்து ஏதோ நடிகனை சுற்றி ஒளிவட்டம் வரைந்தவாறு டிசைன் போட்டுக் கொண்டிருந்தான். 

அண்ணாச்சி இந்த திசைக்கே வரவில்லை.

பையனையும் ஒரு நாள் காணவில்லை. எங்கேனும் கோவில் நகரங்களில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கலாம்.

இரண்டு நாள் குடியில் கதிரை சமாதானம் செய்ய முடிந்தது. இப்போது எல்லாம் வெறும் சம்பவங்கள் தான், சரஸ்வதி போனால் என்ன லஷ்மி வந்து விட்டாளே !

* * *

என் மனைவியின் மார்புகளை விட  இந்த லஷ்மியின் முலைகள் சற்று கடினமானவையாய் இருக்கும் என்று திரும்ப திரும்ப தோன்றுகிறது. பிசாசாமே அவ்விஷயத்தில் ! நான் கதிரை பின்பற்றி அவளிடம் ஒன்றிரண்டு ஜோக்குகளை சொல்லிப் பார்க்கிறேன். நமுட்டு சிரிப்புகள் கூட சிலவற்றின் சமிங்ஞைகள் தான் என்று தோன்றுகிறது. இந்தக் காரியம் வேண்டுமா வேண்டாமா என்று தெரியவில்லை.

எனது லக்ஷ்மி அவனிடம் சிரித்து கொண்டிருக்கிறாள் என்பதால் நட்பை அறுத்து விட்டு மனநிம்மதியாய் இருக்கலாமோ என்பது தான் என் முதல் சாய்ஸ். இருப்பினும் ...... லக்ஷ்மி, அதாவது கதிரின் லக்ஷ்மி எனது கற்பனைகளில் சரஸ்வதி போலவே டான்சாடுவதைத் தடுக்க முடியவில்லை. (சொல்ல மறந்து விட்டேனே, அண்ணாச்சி இப்போது வைத்துக் கொண்டிருக்கிற பெண்ணின் பெயர் வீரலட்சுமி.) இத்தனைக்கும் சினிமாவில் கூட எனக்கு டான்ஸ் பிடிக்காது. மனசு நொந்த ஒரு ராத்திரியில் மரக்கட்டை போல நான் படுத்து கிடந்தபோது ஜட்டி பாடியுடன் எழுந்த சரஸ்வதி மியாவ் மியாவ் பூனைக்குட்டி, வீட்ட சுத்தும் பூனைக்குட்டி என்று ஆட ஆரம்பித்த போது எனக்கென்னவோ கண்ணீர் தான் வந்தது. நிறுத்து என்று கூச்சலிட்டு அவளை அணைத்துக் கொண்டேன். ஆனால் இந்த லக்ஷ்மி ஆடினால் பிரம்மாதமாயிருக்கும் என்று தோன்றுகிறது. இதில் உள்ள சாதகமான கற்பனை என்னவென்றால், நிச்சயமாய் கூச்சம் இல்லாமல் இவள் ஆட சம்மதிப்பாள். 

ஆசைகள் திரள்கின்றன.

நான் எப்படி இதற்கு வழியுண்டாக்குவது என்று சிந்திக்கையில் இவன் முந்திக்கொண்டு விட்டான். "டேய், குடும்பத்தோட வந்து என் வீட்டுல ரெண்டு நாள் தங்கேண்டா !'  என்றவனின் கண்களில் கபடத்தை தேடியவாறு "நான் வேலைக்கு போவ வேணாமா ?" என்றேன். 

"சரி, உன் மிஸ்சஸ்சயும் கொழந்தைகளையும் மட்டும் அனுப்பி வை !"

கெட்ட வார்த்தைகளால் நான் திட்டியது என் மனைவியை. இரவில். அவள் பச்சை குழந்தை மாதிரி முகத்தை வைத்து கொண்டு எதுக்கு எதுக்கு இந்த கோபம் என்று திணறுவது போல நடித்தாள்.

மறுநாள் கூட எனக்கு வேலைகள் ஓடவில்லை. வைன் ஷாப்புகள் காந்தி பிறந்த நாளை கொண்டாடியவாறிருந்ததால் ஸ்ரீலஸ்ரீ ராமகிருஷ்ண ஆச்சார்ய பகவானின் உரை கேட்க போனேன். அவர் தேவிகளை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். சமஸ்கிருத மழை. என் மனசில் ராமநாராயணன் படத்தில் வரும் தேவிகள் கிராபிக்சோடு கலக்க பப்ளிக் கக்கூசுக்கு சென்று அவஸ்தையை தீர்த்துக் கொண்டு சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம் போனேன்.
எங்கே போகலாம் ?

சாமுண்டி, மூகாம்பிகா, விசாலாட்சி..யார் எனக்கு ஆறுதல் தரக்கூடிய தேவி?
பஞ்சு பஞ்சாய் பறக்கிற சேலை கட்டி ஹாண்ட் பேக்கோடு ஒரு தேவி என்னிடம் டைம் கேட்டது.

போகலாமா என்று யோசித்து எய்ட்ஸ் பயம் வரவே அவசரமாய் வீடு திரும்பி லக்ஷ்மியை மல்லாத்தினேன்.

எல்லாம் முடிந்து விச்ராந்தியாய் படுத்து கிடக்கும் போது "கதிர் போன் பண்ணி இருந்தார். நீங்களும், கொழந்தைகளும் எப்ப வீட்டுக்கு வர்றீங்கன்னு கேட்டார் " என்றாள்.

எனக்கு மறுபடியும் வயிற்றை கலக்கியது. இப்படி தொடர்ந்து ஆறு ஏழு தடவை பின் பக்கம் அவிழ்ந்து உடம்பு தளர்ந்ததில் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டேன். குளுகோஸ் ஏறிக்கொண்டிருந்தது.

மங்கலாய் எனக்கு முன்னே என் மனைவியும் கதிரும் தெரிகிறார்கள். என்னவோ ஒரு ஜோக் சொல்லியிருக்கிறான். லக்ஷ்மி கிணுங்குவது கேட்கிறது. 

எனக்குள் எங்கோ ரொம்ப தூரத்தில் நான் பற்களைக் கடித்துக் கொண்ட போது சரஸ்வதி வந்தாள். நீ என் தெய்வம் என்றாள். சரஸ்வதி என் சரஸ்வதீ. எங்கே இருக்கிறாய் நீ. நான் உன்னை காதலிக்கிறேன். நான் உன்னை காதலிக்கிறேன். நான் உன்னை .....


                                  

                                                                                "இதனால், அறியவரும் நீதி ?"

                                                                                                                                                                                  









 

 

No comments:

Post a Comment