Wednesday, September 21, 2011

சுழலுகின்ற சில காதல் கதைகள் - 2




ஏரியாவை சேர்ந்த கழக கண்மணிகள் ஒரு டேபிள், குத்து விளக்கு, தோரணங்களையும், அண்ணாவின் புகைப்படத்தையும் எடுத்து கொண்டு வந்து ஒரு ஸ்பாட்டை தேர்வு செய்து பயபக்தியுடன்  ஒரு பூஜை செட்அப் செய்யும் போது சற்று தள்ளி செத்து கிடந்த இளங்கோவை பார்த்தார்கள். அப்புறம் என்ன நடந்திருக்கும். அந்த வருடம் மரியாவால் தன் பிறந்தநாளை கொண்டாட முடியவில்லை. அதற்கு அடுத்த வருடம் டேவிட்டின் மகளும் தனது கணவனுமான மைக்கேலுடன் பிரமாண்டமான ஒரு கேக்கை வெட்டி முதல் துண்டை மேரியின் வாயில் செருகினாள். மேரி யார் ?. உண்மையில் கதை இங்கேதான் துவங்கியிருக்க வேண்டும் . ஏனெனில் நான் திரையில் சொல்ல போவது இளங்கோ மரியாவின் காதல் காவியத்தை அல்ல. மரியாவும் மேரியும் காதலித்தார்கள். நான் சொல்வது சரிதானா ?. மரியா தன் உயிர் வரைக்கும் மேரியை மோகித்தாள், கோபால் சின்னானை மோகித்தது போல.

விளக்குகள் எரிந்தன. நம் மக்கள் தேனை குடித்த நரி மாதிரி இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டேன். அந்த மாதிரி இருந்துவிட கூடாது என்கிற சிரமத்துடன் புனிதா (இறுக்கத்துடன்) சென்று எனக்காக பாப்காரன் வாங்கி வந்தாள். நான் சமரசமாய் படத்தை பற்றி ஏதேனும் முனக பார்த்து அது சரியாய் வரவில்லை. எனவே "பாப்காரன் அருமையாய் இருக்கிறது" என்றேன் தயக்கமில்லாமல்.

"விஷயம் தெரியுமா "

"என்ன?"

"உன் நண்பர் வந்திருக்கிறார் படத்துக்கு".

"யார்? "

"இந்த படத்தின் இயக்குனர். அருள். மக்களோடு மக்களாய் அமர்ந்து படம் பார்த்து அவர்களுடைய மன நிலையை கணிக்க வந்திருக்கிறார்".

"பேசினாயா?"

"வேறு வழி ?"



அருளை பற்றி சொல்லலாம். அதற்கு இங்கே இடமில்லை. ஏதோ பாடல் காட்சியை படம் பிடிக்கிற நேரத்தில் சுவிட்சர்லாந்திலிருந்து எனக்கு தொலை பேசினது தான் கடைசி. படத்தின் கதையை பற்றி கொஞ்சம் பேசினான். அவனுக்கு நக்சலைட்டுகளை பிடிக்கவில்லையாம். அவர்கள் இந்த தேசத்துக்கு அச்சுறுத்தலாய் மாறிக்கொண்டு இருக்கிறார்கள் என்றது உள்துறை அமைச்சர் சொல்லுவது மாதிரியே இருந்தது. இந்த தேசத்துக்கு எனது பங்கு என்ன என்று அவன் யோசித்திருக்கிறான். அப்போதுதான் இந்த படைப்பு அவனது மூளையில் பொறி தட்டி இருக்கிறது. நீ ஏன் வலைதளத்தில் காந்தியை பற்றியும், அகிம்சையை பற்றியும் எழுத கூடாது என்று கேட்டான். படம் விட்டு போகும் போது இருவரும் சந்தித்து கொள்வோம் என்று நினைக்கிறேன். குறைந்த பட்சம் புனிதாவிடமாவது கருத்து கேட்க வேண்டாமா?.

திரையில் இப்போது ஹீரோ சொற்பொழிவை ஆரம்பித்தான்.

ஹோட்டலுக்கு புதிதாய் வந்து சேர்ந்த தியாகராஜன் கூட ஒரு ஹீரோதான். ஏறக்குறைய பல விஷயங்களை தெரிந்து வைத்திருந்தான். அத்தனை பேரும் ஈர்க்கபட்டார்கள். முக்கியமாய் சின்னான். அது மட்டுமில்லாமல் இருவருக்கும் சமவயது. சின்னானுக்கு தியாகுவின் பெண் அனுபவங்கள் பிரமிப்பாய் இருந்தன. கோபால் தற்கொலை செய்து கொள்கிற அன்று நடந்தது என்ன. எழுதும் போது கவனமாய் இருக்க வேண்டும். கொஞ்சம் வரிசைப் படுத்தி பார்க்கலாம். கோபால் நெக்குருகின நிலையில் இருக்கிறான். ஊரிலிருந்து வந்த கடிதம் மனதின் சம நிலையை குலைத்திருக்கிறது. அமைதியாய் உட்கார முடியவில்லை. கொஞ்சம் வேதனையுடனும், கொஞ்சம் கிளர்ச்சியுடனும் வானொலி கேட்டு கொண்டு இருக்கிறவர்களை கடந்து கச்சடாவாய் கிடந்த சமையலறை பகுதிக்கு வந்தான். அதனை பேரும் இருக்க தியாகு அண்ணா எழுதிய ஓர் இரவு படத்தின் கதையை கொக்கரிப்புடன் சொல்லி கொண்டு இருக்கிறான். கோபால் கவனிப்பது சின்னானை. அவன் முகத்தில் தான் எவ்வளவு ஆர்வம் ?. ஏதோ வழிபாடு செய்கிறவனை போல அல்லவா தியாகு முகத்தை பார்த்திருக்கிறான்?. இயலாமை நெம்பியது. இந்த உலகில் ஒற்றை மனிதனாய் தனித்து நிற்பது சரேலென்று தலையில் அடிக்க, நிற்கிற பூமி கால்களுக்கடியில் நழுவிற்றோ? சம்பந்தமில்லாமல் டேய் என்று கத்தினான். அனைவரும் பார்த்தார்கள். பாத்திரங்களை கழிவி வைக்காமல் என்ன வெட்டி பேச்சு  மயிரு என்று அவன் வாய் கேட்டது. அனைவரும் சிரிக்கிறார்கள். ஏன் ?.சின்னான் அந்த லவடேகபாலிடம் என்ன புரு புருக்கிறான்?. இவன் என்னவென்றே புரியாத வார்த்தைகளை துப்பி ஆடும் போது நெருங்கி வந்த சரக்கு மாஸ்டர் தேவடியா மகனே என்று எட்டி உதைத்த போது வேறு உலகத்தில் வந்து விழுந்த மாதிரி இருந்தது. சின்னான் உள்பட அத்தனை பேரும் சரக்கு மாஸ்டரை போலவே தென்பட்டார்கள். ஒரு கணத்தில் கோபால் தன் அம்மாவை நினைத்து கொண்டான். அடிபாவி நீ மட்டும் ஏகாம்பரத்துக்கு வைப்பாட்டியை இல்லாமல் இருந்து, ஒருவேளை ஒரே ஒருவேளை ஒழுங்காக சாப்பாடு போட்டு இருந்தால் மெட்ராஸ்க்கு வண்டி ஏறி இருப்பேனா? இப்படி கண்டவனிடம் அடி வாங்கி இருக்க வேண்டி வருமா. போடா அந்தாண்ட என்றான் சரக்கு மாஸ்டர். இவன் உறைந்து சிந்தனையே இன்றி வெறித்து கொண்டு நிற்க "நீ கதய சொல்லு தியாகு" என்று சின்னான் கேட்பது இடி இடித்தது. நகர்ந்து போய் ஒரு பெஞ்சு மீது படுத்து கொண்டான். கண்களை இருக்க மூடி கொள்ள வர்ணங்கள் சுழன்றன. தூக்கமா அது? மயக்கமா? சற்று நேரத்தில் யாரும் இல்லை. சுவரின் மீது கொழுத்த பல்லி ஒன்று தலையை தூக்கி பார்த்தது. யாரையாவது கொல்ல வேண்டும் என்பது போல முறுக்கேறி விருட்டென எழுந்தான். ஓடிச் சென்று கத்திகளை பரப்பினான். இதில் எது சரி என்று ஒவ்வொன்றையும் எடுத்து பார்க்கும் போதே மனசின் ஒரு ஓரத்தில் தளர்ச்சியாயிற்று. பல்லை கடித்து கொண்டு திரும்பி வந்தான். நின்றான். பார்த்தான். ஒரு பரவச சிரிப்புடன் நீ சாவனுண்டா என்றான். அவன் பாத்துக் கொண்டு நின்றது கிணற்றில் தெரிந்த தனது நிழலை. சரசரவென கயிறை உருவிக் கொண்டு கம்பிகளுக்கு அப்பால் தெரிந்த வானத்தை பார்த்து சவால் விடுவது மாதிரி சொடக்கு போட்டான்.

மாட்டிக் கொண்டு செத்துப் போனான்.

நான் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டேன். 



மரியா இளங்கோவை விரும்பினாளா?. கிடையாது. தன்னை பார்த்தாலே விருவிருப்படைந்து,உதடுகள் துடிக்க, செயலற்று நிற்கும் இளைஞன். பேசும் போது வார்த்தைகள் உடைந்து மூச்சு திணறுகிறது. அது ஒரு பெருமிதம் அல்லவா? எப்போதேனும் அவன் இயல்பாய் இருப்பது போல தெரிந்தால் இவளுக்கு ஏதோ திகு திகுவென எரியும். அவனுக்கு அந்த துணிச்சல் வரக்கூடாதே என்று பட படத்து போவாள். உடனடியாய் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொண்டு அவனை நுட்பமாய் கொத்துவாள். ஒரு மரவட்டை மாதிரி அவன் சுருளும் போது உண்டாகிற ஜிலு ஜிலுப்பை  யாரிடமும் சொல்ல முடியாது. ஆனால் ஆக்னஸ் மேரி வந்து இவளை தலை கீழாக்கிய பிறகு இளங்கோவை பற்றி மாற்றி யோசித்திருக்கலாம். என்னவென்றால், டேவிட்டின் குடும்பம் பெரும் பகுதி நேரத்தை இவள் வீட்டில் தான் கழித்தார்கள். மைக்கேலுக்கு மரியாவை கட்டுவது என்று பெரிய மட்டத்தில் பேச்சு முடிந்து, அந்த விஷயம் குஞ்சு குளுவான்களுக்கெல்லாம் தெரிந்து இருந்தது. தனது தமையனை மணமுடிக்க போகிற பெண்ணாயிற்றே என்கிற வாத்சல்யத்தால் ஆக்னஸ் தன்னை அடிக்கடி வருடிக் கொடுப்பதாய் மரியா நினைத்தாள். ஒரு முறை ஏதோ பேசும் போது தலை அசைத்து கேட்டிருந்தவள் இவளை தன்னோடு அணைத்து தலையை அழுத்தி கொண்ட போது அவளின் முலை காம்பு விறைத்திருந்ததை அறிந்தாள். மரியா ஆக்னசின் கண்களை ஏறிட்டு பார்க்கும் போதெல்லாம் திடுக்கிட்டு, தொடைகளுக்கிடையே குளிர் ஏற்படுவதை நம்ப முடியாமல் திகைத்தாள். சில நேரம் மற்றவருடன் இணைந்துக் கொண்டு வீட்டுக்கு வராமல் ஆக்னஸ் தவிர்க்கும் போது மரியாவுக்கு அவள் தன்னை பழிவாங்குவதாகவே தோன்றும். ஜப்பானிய முதலாளிகளின் பெருமைகளை பற்றி வள வளவென்று கதை சொல்கிற மைகேலின் முகத்தில் ஆக்னசுடைய ஜாடைகளைத்தான் இவள் துழாவிக் கொண்டிருப்பாள். இறுதியில் அந்த இரவு வந்தது.

"தூங்கலையா? "

"ம், தூங்கணும்."

"அப்புறம் எதுக்கு என்னையே பாத்துக்கிட்டுருக்கே?. நான் ஒன்னும் மைகேல் இல்ல. ஹ, ஹ."

மரியாவுக்கு சோகமாயிருந்தது. நாகரிகமாய் விலகி படுத்து கண்களை மூடி கொண்டாள். எனக்கு என்ன வேண்டும்? மனசை முன்னகர்த்த சிரமமாயிருந்தது. நிற்கும் இடத்தில் வட்டம் போடுவதால் சீக்கிரமே தூக்கம் மூடியது. ஒரு கட்டத்தில் இனம் தெரியாத ஒரு இழுப்பில் ஒன்றுக்கு பெய்து விட்டதை போல திடுக்கிட்டு விழிக்க ஆக்னஸ் தன் நாவால் இவள் வாயில் துழாவிக் கொண்டிருந்தாள். உடல் பூராவும் புல்லரிக்க, தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தது தாமரை. ஒடுங்கினாள். குறுக்கிகொண்டாள். கண்ணீர் விட்டாள். ஆனால் ஆக்னஸ் ஒரு சூறாவளி. ஓத்தா, ஒரு ஆம்பளைய போல மரியத்தை பிரித்து மேய்ந்தாள். பொங்கி பெருகிய தேனடையை ஒருத்தியால் இப்படி ருசித்து சாப்பிட முடியுமா. அணையுடைந்து போய் வியர்வை வெள்ளத்தில் இடிக்கிற சுவாசத்துடன் அம்மணக்கட்டையாய் தன்னை பரப்பிக்கொண்டு கிடந்தாள் மரியா. ஆக்னசுக்காக நான் செத்து கூட போவேன் என்று அப்போது மனசில் பட்டது. கடைசி வரை மரியா அதை மாற்றிக் கொள்ளவில்லை. ஒரு வேளை இந்த ஆராதனை அவள் மனசுக்குள் ஏறவில்லையென்றால் இளங்கோவுக்கு இப்போது அவள் மனைவியாக கூட இருந்து இருக்கலாம். அந்த படுபாவி பயல் தெருவில் கிடந்தது செத்து ஒரு வருடத்துக்கு அப்புறம் மைக்கேலை திருமணம் செய்ய வேண்டியதாயிற்று. மொத்தம் நாலு தடவையோ, ஐந்து தடவையோ மரியம் மன்றாடி கேட்டும், கதறி அழுத பிறகும் தான் ஆக்னஸ் படுக்கைக்கு வந்தாள். சே,சே செய்த பாவத்தை திரும்ப திரும்ப செய்து பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்வது நியாமா? மைக்கேல் அவளுக்குள் ஒரு தோல் குடுவையை நுழைத்து அசைத்து கொண்டிருந்தபோதும் பக்கத்து அறையில் படுத்திருக்கிற ஆக்னசுக்காக அவள் மனம் ஏங்கியது. ஆக்னஸ் தான் காதலித்த பையனை வீட்டுக்கு கொண்டு வந்த போதும், அவனையே திருமணம் செய்து கொண்ட போதும் இவள் அலைக்கழிந்தாள். நறு நெய்ப் பூசி குளித்துக், உடம்பை ஓடுகின்ற நதிநீர் போல பரிசுத்தத்துடன் வைத்திருந்து நான் ஈரத்தோடிருக்கிறேன் என்று  சொல்லாமல் சொன்ன போதும் ஆக்னஸ் ஏன் பாறாங்கல்லாய் இருக்கிறாள்?. இல்லை, அதுகூட இல்லை. புருஷனாய் வந்த அந்த நாயிடம் கொஞ்சி கொண்டு, தோல் குடுவையை உள்வாங்கி சந்தோஷப்பட்டு கொண்டு.......   என்ன வாழ்கை இது?. இளங்கோவை போலவே மரியமும் பேச்சிழந்தாள். மரக்கட்டைகளுக்கு கர்ப்பம் உண்டாகுமா. மலடி என்ற பேச்சு வலுத்தது. மைக்கேல் இந்த சாக்கை வைத்து நிறைய ராத்திரிகளில் வெளித் தங்கினான். நிர்பந்தம் ஏற்பட்ட போது குடித்து விட்டு கற்பழித்தான். ஒரு சவம் கரை ஒதுங்குவதை போல மரியா தாய் வீடு போய் சேர்ந்தது வரை இக்கதையை விவரிக்க முடியாது. எனெனில் ஒரு திரைக்கதை அதை தாங்காது. எனினும் வேறு ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். மரியாவின் கண்களில் தட்டுப்படுகிற மாதிரி ஆக்னஸ் ஒரு இடத்துக்கும் வரவில்லை. இரண்டு பிள்ளைகளை பெற்று அதற்கு சோறுட்டி, சூத்து கழுவி, ஸ்கூலுக்கு அனுப்பி, வீட்டில் உள்ள ஆம்பளை கழுதைக்கு எல்லா சேவைகளையும் செய்து  கொண்டிருக்கிற பல பெண்களில் அவளும் ஒருத்தியாக ஆகி விட்டிருக்கலாமில்லையா?.



இங்கே கதாநாயகன் தேசத்தின் பிரச்னையை தனியொரு ஆளாய் நின்று தீர்த்துக்கொண்டு இருக்கிறான். க்ளைமாக்ஸ் பைட்! நிமிர்ந்து நெட்டு முறித்து கொண்டு எழுந்து கொள்ள தயாரானேன். திரையில் இருந்து இறங்கி வந்து என்னை போட்டு ஒதைத்து விடுவானோ என்று கூட பயமாயிருக்கிறது. கூடவே நானும் ரொம்ப பண்ணிக் கொள்கிறேனா என்று சந்தேகமாகவும் இருக்கிறது.

இரண்டு கதைகளையும் கோர்க்க வேண்டும். நிறைய பேருக்கு ஆபாசம் என்றால் குமட்டல் வரும் அல்லவா. எது ஆபாசமென்கிற வரையறை பல கோணங்களிலும் தெளிவாகாமல் இருக்கிறது. எனவே சற்று எச்சரிக்கையுடன் செயற்படுவது உத்தமம். மரியா மனநல விடுதியில் சில நாள் சிகிச்சை பெற்றதுக்கு பின்னர் அவளை சகஜமாக்குகிற முயற்சிக்காக வெளியே அழைத்து வந்து பராக்கு  காட்டி கொண்டு இருக்கும்போது வீட்டார் எதிர்பாக்காத விதத்தில் அந்த சம்பவம் நடந்தது.

பத்து பேரை பிடித்து தள்ளாமல் ஒரு அடி முன்னகர முடியாத அந்த மனித கடலில், இடுப்புக்கு கீழே இருந்த துணியை அவிழ்த்து ஜனங்களுக்கு தன் குறியை சுட்டி காண்பித்தவாறு அவள் அல்லேலூயா சொன்னது எதற்க்காக? மனித மூளைக்கு இதை விளக்கி சொல்கிறா மாதிரி நான் எதையெல்லாம் எழுத வேண்டும்? யாராவது ஒரு கதாநாயகன் இதை எல்லாம் முடித்து வைத்து விடுவானா?



நானும் புனிதாவும் தப்பித்து போக முடியவில்லை. அருள் மிக சரியாய் என்னை வழிமறித்தான்.

"எப்படி இருக்கிறது என் படம்?"

"ம்"

"இடைவேளையில் புனிதாவை பார்த்தேன். சொன்னீர்களா? என்று கேட்டு விட்டு "பாதி படத்துக்கே என்னை உச்சி குளிர்ந்து பாராட்டினார்கள். இதோ பாருங்கள். மக்களும் கூட அதைதான் பிரதிபலிக்கிறார்கள். ஒரு வழியாய் வெற்றியை அடைந்து விட்டேன்" என்றான்.

"நல்லது"

"நீ ஏதோ திரைகதை முயற்ச்சியில் இருப்பதாக கேள்விபட்டேன். என்ன கதை?"

நான் ஒரு கணம் திகைத்தேன். என்னை அறியாமல் என் வாய் "காதல் கதை தான்" என்றது. "ஆனால் அது காதல் கதைதானா என்றும் தெரியவில்லை" என்றேன்.

தலையில் அடித்து கொண்டு "ஏன் இப்படி இருக்கிறீர்கள்?" என்றான்.

நான் புனிதாவை பார்த்து சிரிக்க முயன்றேன். அது ரொம்ப பரிதாபமாய் இருந்திருக்க வேண்டும்.


 









 

No comments:

Post a Comment