Tuesday, September 13, 2011

காதலென்பது பெருமிதமாய் சொல்லபட்டிருக்கிறது அல்லவா ?




நான் என்னை வைத்துக் கொண்டு
எதையும் கடக்கவில்லை.

விஸ்கி கிண்ணத்தின்
ஆயிரம் மைல் ஆழத்தில்
இரும்பை போல அசைகின்ற
பேரலைகளின் நிசப்த கோஷமா
வாழ்வு ?

தனிமையை  பொத்தலிட்டு
ஒரு பாம்பை போல
ஏறி வருகின்ற இரவு
படுக்கையில் படமெடுத்து
அமர்ந்திருக்க
இந்த வெட்ட வெளியில்
என் கண்ணே
எப்படி நான் உறங்குவேன்?

நீ
தலைகோதி விடுகிற
ஒரு கனிவின் கனவில்
கரு நிழல்களை கலைத்தவாறு அணையும்
மெல்லிசையின் தாலாட்டுக்கு
நான் என்னை தந்திருக்கிறேன்
என்னை காப்பாற்றிக் கொள்ள

உனக்கு வசப்படுகிற பெருமிதத்தை
கைப்பற்றிக் கொள்ள

ஏனெனில் ........




1 comment:

முனைவர் இரா.குணசீலன் said...

தங்கள் வலைக்கு சரியாகத் தான் பெயரிட்டிருக்கிறீர்கள்

சுழல் என்று..

Post a Comment