வெடி வைத்து பிளந்தால்
பாறைக்கு வலியில்லை
யாருக்கு தெரியும்
ஒளி கொண்டு புகுந்தால்
இருளுக்கு வலியில்லை
யாருக்கு தெரியும்
பிசையப்படும்போது
மண்ணுக்கு வலியில்லை
யாருக்கு தெரியும்
விருட்சத்தை வைத்திருந்தாலும்
விதைக்கு வலியில்லை என்று பம்மாத்திவிட்டு
வலிகளை பார்த்தால் வாழ்க்கையே இல்லை
ஒர்ரே போடு.
No comments:
Post a Comment