Friday, June 29, 2012




வர்ணம் பூசவில்லை
இலக்கம் எழுதவில்லை
முக்கியமாய் பெயர் பலகை
மீசை முறுக்கவில்லை

யாரும் வழி சொல்லி விட முடியாத
இடத்தில்
இவ்வீட்டை சாத்திக் கொண்டு
திறக்க சாத்தியமுள்ள கதவை
திரும்பிப் பாராமல்
நீவந்து கதவை திறப்பாய்
என்று காத்திருக்கிறேன்

ஏன் என்றால்
நுழைய வேண்டியிருப்பது
உனக்குள்ளே
நான்.

No comments:

Post a Comment