வர்ணம் பூசவில்லை
இலக்கம் எழுதவில்லை
முக்கியமாய் பெயர் பலகை
மீசை முறுக்கவில்லை
யாரும் வழி சொல்லி விட முடியாத
இடத்தில்
இவ்வீட்டை சாத்திக் கொண்டு
திறக்க சாத்தியமுள்ள கதவை
திரும்பிப் பாராமல்
நீவந்து கதவை திறப்பாய்
என்று காத்திருக்கிறேன்
ஏன் என்றால்
நுழைய வேண்டியிருப்பது
உனக்குள்ளே
நான்.
No comments:
Post a Comment