நான் ஒரு தீர்கதரிசி
வேண்டும் என்று போயிருந்தால்
இந்நேரம் நொறுங்கியிருப்பேன்
நான் ஒரு புத்திசாலி
இப்படித்தான் என்று தெரியாதிருந்தால்
இந்நேரம் என்னை
முடித்துக்கொண்டிருப்பேன்
நான் ஒரு அகங்காரி
மண்டியிட்டு கெஞ்சியிருந்தாலும்
கொடுக்கப்பட முடியாதவைகளை
பெற்றிருக்க முடியாது
இறுதியாக
நான் ஒரு தீவு
என்னில் ஒதுங்குபவர்களும்
தனியாக்கப்படுவார்கள்.
No comments:
Post a Comment