நசித்து போனதாய்
அடங்கிய எந்தை
கண்ணுக்குள் வைத்து
காக்க ஆகாமல்
பிதுங்கிய அம்மா
செத்தையும் சொத்தையுமாய்
பத்தாயிரம் கூட்டம்
எங்கோ ஹிமாலய அடிவாரத்தில்
பெயரறியா பூவாயிருந்து
குளிரில் நீராடி
ஏதோ சாலை விபச்சாரியின்
யோனியாயிருந்து
வெள்ளைப்படுகிறேன்
ஏய், வெண்ண
உனக்கு தெரியுமா
இனி என்றோ பிறக்க போகிற
குழந்தையின் வீரிடலில் இருக்கும்
என் பசி
No comments:
Post a Comment