Sunday, June 17, 2012




தந்தையர் தினம் என்று ஒரு தினமாம்
கேட்டுக் கொள்
அதாகப்பட்டது உனக்கென்று
ஒரு நாள்
நீ விதைத்து முளைக்க வைத்த ஓன்று  
பசியும் தாகமுமாய்
உனது
குருதியை குடித்து
தசையை தின்று முடிக்கிறது அல்லவா,
தீர்க்க முடியாத அந்த
குற்றவுணர்ச்சி
தானும் விதைக்க வேண்டி இருக்கிறபடியால்
அண்ணாந்து வானில் நிலை கொள்ள வேண்டிய
பீதி
அர்த்தமறியா வாழ்வின் அநீதி முன்
மண்டியிடுகிற
மலடு
ம்ம்ம் என்ன சொல்லி என்ன
இனிமேல் தினங்கள் இல்லாமல் நம்மை  நாம்
ஏமாற்றி கொள்ள முடியாது.

No comments:

Post a Comment