உணர்வு..!
ஒரு கோப்பையில் கரைந்து போகுமென்றால்
நினைவுகள் இரக்கமுள்ளவை
லஹரி நெம்புமொருஉறக்கத்தில் மறந்து போகுமென்றால்
அவை அடக்கமுள்ளவை
எரியும் குடல்களின் இழுவையில்
செரித்து கழிவாகுமென்றால்
சுலபமானவை
ஹே......
அப்படியா
பசிக்கு உணவு
கால்களுக்கு பக்கத்தில்
இருக்கை
எப்போதும்
தலை வருடி தந்து
நான் என்னையே வளர்த்துக் கொண்டது
அல்லவா?
உன்னை துரத்தினால்
நான் காணாமற் போவேன்......
No comments:
Post a Comment