ஒரு
பயணம் தானே எல்லாம்
ஒற்றையாவோ
ஊரையே கூட்டிக்கொண்டோ
புத்தன்
என்ன கொண்டு போயிருப்பான்
என்று தெரியாவிடினும்
தங்கத்தை அள்ளி வரப் போனவர்கள்
என்ன வைத்துக் கொண்டு
இருந்திருப்பார்கள் என்பது நமக்கு தெரியும்.
கருவிகளின் முகம் மாறியிருக்கலாம்
கணக்கில் இருப்பது தானே
எல்லாம்?
No comments:
Post a Comment