Tuesday, June 12, 2012

விசேஷம் எதுவும் இல்லை




ஒரு காவியத்திலும்
நமக்கு கிடையாது
இடம்

சந்தடி சாக்கில்
யாருக்காவது சொன்னால்
அவர்களுக்கு கொட்டாவி வரும்

ஏய்ய்
உலகத்துக்கு ஆயிரம் கவலை தெரியுமா

இருந்தாலும் ஒரு விஷயம்,
இந்த இரவில் இந்த தனிமையில்
பிராணன் கனக்கிற
இந்த தீ நொடியில்
நீயும் இந்த விண்மீனை பார்க்கிறாய் என்றால்

சொல்லு இவ்வாழ்வை விட
வேறென்ன விசேஷம்?

1 comment:

Thoduvanam said...

" இந்த இரவில் இந்த தனிமையில்
பிராணன் கனக்கிற
இந்த தீ நொடியில்
நீயும் இந்த விண்மீனை பார்க்கிறாய் என்றால்

சொல்லு இவ்வாழ்வை விட
வேறென்ன விசேஷம்?".

ரசிக்கிறேன்.வாழ்வின் எல்லா தருணங்களும் நேசிக்கப் பட வேண்டியவை.இணைந்த உள்ளங்கள் இனிமை கூட்டிடும்.

Post a Comment