Sunday, June 17, 2012




திரைக்கதை


புழங்கு மொழியில்
சிறிய பொறி தான்
அது

பற்றியெரியும் வனமென
துவங்கும்

தானே தன்னை கைவிட்ட முட்டுசந்தில்
பிரும்மாண்டமான சாலைகளை பரப்பி பார்த்து
உடல் குறுக்கி நடக்கக்கூடும்
தேய்மானம் போன
ஒற்றையடிப்பாதையில்

யோசித்து பாரேன்
இப்போது துடித்து தெறித்து
யாருமறியா இருளில் பறிக்கிற
சினை முட்டையை

கருவில் இருந்துகொண்டு
கதையை
கதையில் இருந்து கொண்டு
முகங்களை
முகங்களில் இருந்துகொண்டு
வாழ்வை அறி

சொல்.

No comments:

Post a Comment