comes with the wind
எத்தனை மகத்தானவள்
நீ
என்பதை உனக்கே
சொல்ல வேணும்
சிருஷ்டிக்க போகிற
காவியம் உன்னை பற்றியது
என்பதையும்
அலைகள் வந்து மோத
துல்லிய நிலவொளியில்
ஜென்னியை பற்றி
சலவை கல்லில் மினுங்கும்
ஷாஜகானின்
கண்ணீர் துளிகள்
பற்றி
அன்னா தஸ்தவேஸ்கியின்
காதல் பற்றி
சாலமன் மீன்களை பற்றி
இன்னும்! இன்னும்!
தொட்டியில் விட்ட
ரெட்டை மீன்களாட்டம்
மனசு ரெண்டும்
மீட் ஆகி விட்டால்
ஓரிரு முத்தமோ
கொஞ்சம் கண்ணீரோ
அதற்கு பின்னர்
வேறு வழியின்றி
கேட்க வேண்டியிருக்கிறது
நரைத்த ஜீன்ஸில் ,
மொட்டையடித்துக்கொண்டு,
சிகப்பாய்
யார் அவன்?
நற நற நற நற நற
No comments:
Post a Comment