Sunday, June 10, 2012





சிரஞ்சீவி  சார்.....


எப்படி இருக்கிறாய் 
என்றா  கேட்டாய் 

இப்போது இருக்கிறேன்  என்பது 
எப்படி இருக்கிறேன் என்பதை  விடவும்  முக்கியம் 

கல்வாரி  மலையெங்கும் 
கருகி  இருள் படர்ந்து 
உறுதியின்  கடைசி விண்மீன் 
அணையும்போது
என், தேவனே  ஏன் எம்மை கைவிட்டீர்  என
காற்றிலொரு முணுமுணுப்பு கரைந்திற்று
அல்லவா 
அப்போது  கூட  இருந்திருப்பேன் என தோன்றுகிறது.

ஆயிரம்  வருஷங்களுக்கு அப்புறமும்
இருப்பேன் 

எப்போதும் இருக்கிறவனிடம் 
எப்படி இருக்கிறாய் என்று மட்டும் 
கேட்டு விடக்கூடாது.  

No comments:

Post a Comment