தாழிடப்பட்ட
அறை
அடைந்து கொண்ட
கண்கள்
செவிகளின் உள்ளே
கோடி மைல்களுக்கு அப்பால்
அலைகள்
கடல் அலைகள், ஓங்கிஎழுந்து
பதறி பதறி
தன் நெஞ்சை கொண்டு பாறையில்
மோதி பிளக்கும்
அலைகள்
யாராவது வரக் கூடும்
என்னவென்று கேட்கக் கூடும்
பாய் விரித்து தலையணை வைத்து
படு மரியாதையாய் என்கிறேன்......
No comments:
Post a Comment