Friday, June 29, 2012




நீங்கள்
விளிம்பில் தானே நிற்கிறீர்கள்

நீங்கள் என்றால் அது நானில்லை
உங்களுக்குள் வெள்ளம் முட்டும்போது
நான் கரையுடைவதில்லை
எனக்கு கிடைக்கும் பருக்கைகளை
நீங்கள் கணக்கிடுவதுண்டா
என்று திடுக்கிடுவதும்
வழக்கம்

என்றாலும்
உங்களுக்கு உதவி செய்ய
அவா.

அல்லது
ஒழித்து கட்ட
வெறி

ஏனென்றால்
விளிம்பில் தானே நிற்கிறீர்கள்
பத்தாததுக்கு
விறைத்துக் கொண்டும் நிற்கிறீர்கள்

No comments:

Post a Comment