நீயும் நானும் துண்டு வானங்களை பார்த்து
கம்பிகளை கடித்து கலகம் பண்ணி வைக்கிறோம்
தாண்டிக் குதிக்க முடியாத சட்டகங்கள் பற்றி
நமக்கு தெரியாதா என்ன
என்றாலும்
சொல்லில் சிக்கிய பூ ஜடமாயிருந்தும்
சொல்ல தூண்டும் ஒரு சின்ன புள்ளியை
நிறைத்திருக்கிறது
காயம் பட்ட புழுவின் வலி
ஏன் நான் உன் மார்பில் புதையக் கூடாது?
No comments:
Post a Comment