Wednesday, June 13, 2012




நாடு சுற்றி நகர் சுற்றி
நகரின் சந்து பொந்துகள்
எல்லாம் சுற்றி
மீன் விழி மான் நடை
தேன் மொழி
சகலம் பயின்று சலித்து
நட்டுகுத்தின கண்களுக்கு
வெற்று வான்

தூக்கம் வருகிறதா
தூங்கிக் கொள்கிறாயா
யாரோ யாரையோ
கேட்கிறார்கள்

என்னை தான் என்றால்
எப்படி கண்டறியலாம்
லட்சம் அடிதடியில்
இவ்வாஞ்சையின்
விளியை

முதலில் இருந்து துவங்கு
என்கிறான் .
  

No comments:

Post a Comment