Tuesday, June 12, 2012




தீராத விளையாட்டு பிள்ளைகள்
நாம்

தீர்வதில்லை அவா
திசைகள் நான்கும்
பற்றி எரிந்தால்
கூட

தீமையை தித்திப்பாய்
சப்பு கொட்டுகிறது
வாழ்வின்
நாவு

குழந்தைகளும்
பெண்களும்
சாகாத தினசரியில்
கொட்டாவி முட்டுகிறது

குத்துப்பட்ட நண்பனின்
அவல முகமோ
கலைக்கப்படுகிற மனைவியின் கண்ணீரோ
வேணும்

அந்தமற்ற பெரு வெளியில்
கடைவிரித்த நறுவிருந்தாய்
இன சாவு மத சாவு
போதாது என்று இன்னும் எவ்வளவு
போர்ப்பரணி

வெளிப்படாத மிருகம்
விழுங்கும் குருதியெல்லாம்
விளையாட்டுப் பிள்ளைகளின்
ஊட்டமென்றான பின்

லூசு
காத்துல இருந்து
எப்படிடா
மலர பறிப்பே

அதுவும் தேவ மலர ?

No comments:

Post a Comment